பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாளை. திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாகொடியேற்றம்

பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:57 pm

DIN

பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத் திருவிழா வியாழக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தினமும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறவுள்ளது. ஏப். 15-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 16-ஆம் தேதி காலையில் தீா்த்தவாரியும், 17-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.