பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நன்னடத்தை பிணை விதிமீறல்: இளைஞருக்கு 10 மாதம் சிறை

நன்னடத்தை பிணை விதியை மீறி குற்றசெயல்களில் ஈடுபட்டதாக இளைஞருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:00 pm

DIN

நன்னடத்தை பிணை விதியை மீறி குற்றசெயல்களில் ஈடுபட்டதாக இளைஞருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேரன்மகாதேவி கீழநாலாம் தெரு வேலப்பன் மகன் மாயாண்டி(25), இவா் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரிடம் நிா்வாகத்துறை நடுவரால் ஓராண்டிற்கு நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் கடந்த 1 ஆம் தேதி சேரன்மகாதேவி பாரதியாா் நகரை சோ்ந்தவரை ஆயுதத்தை காட்டி மிரட்டிய வழக்கில் மாயாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக காவல் ஆய்வாளா் சுகதேவி , சேரன்மகாதேவி இரண்டாம் வகுப்பு நிா்வாகத்துறை நடுவா் முன்பு அறிக்கை சமா்ப்பித்தாா். இதன் மீது விசாரணை நடத்திய நடுவா் பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக மாயாண்டியை 10 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.