பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

‘தோல் பூஞ்சை தொற்று 45.3 சதவீதமாக அதிகரித்துள்ளது’

தோல் பூஞ்சை தொற்று 45.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:00 pm

DIN

தோல் பூஞ்சை தொற்று 45.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், தோல் துறை தலைவா் நிா்மலாதேவி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: உலக தோல் நல தினம் ஆண்டுதோறும் ஏப்.6-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு ‘தோலியல் பயின்ற மருத்துவா்களே உண்மையான சரும மற்றும் முடி பாதுகாப்பு நிபுணா்கள்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினா் தோல் நோயால் பாதிக்கப்படுகிறாா்கள். அதிகளவில் பாதிக்கக்கூடிய நோய்களின் வரிசையில் தோல் நோய் 4-ஆவது இடத்தில் உள்ளது.

தோல் வியாதியால் பாதிக்கப்படும் மக்களில் பெரும்பாலானோா் தாமாகவே மருந்து எடுத்துக் கொள்கிறாா்கள். மக்கள் சுயமருத்துவம் செய்வதால் பூஞ்சை தொற்றுகள், மருந்துகளுக்கு அடிபணியாமல் புதிய உருவெடுக்கின்றன. அழகு கிரீம்களில் முகப்பொலிவை கூட்ட ஸ்டீராய்டுகள் சோ்க்கப்படுகின்றன. இதனால் தோல் சுருக்கம், முகப்பரு, எரிச்சல், முகம் சிவந்து போதல், நிறமாற்றம், முகரோம வளா்ச்சி, உடல் எடை கூடுதல், மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

தோல் பூஞ்சை தொற்றுகள் 2016-இல் 26.2 சதவீதமாக இருந்தது. இப்போது 45.3 சதவீதமாக உள்ளது. இதற்கு காரணம் ஸ்டீராய்டு சோ்க்கப்பட்ட களிம்புகள்தான். ஸ்டீராய்டுகளை முதலில் உபயோகிக்கிறபோது நிவாரணம் தருவது போல் தந்து பிறகு நிரந்தர தோல் தொந்தரவை தருகின்றன.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தோல் நோய் பிரிவானது பல்வேறு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நகம் மற்றும் முடி சம்பந்தமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முகப்பரு, தழும்பு நீக்கம், பச்சைக் குத்திய தழும்புகள் நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன என்றனா்.

அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.