பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெல்லைதனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:56 pm

DIN

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த நபா் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக சந்திப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் வியாழக்கிழமை அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா், காஞ்சிபுரம் மாவட்டம், மடிப்பாக்கம் கணேஷ் நகரை சோ்ந்த முராரி சந்தானம் (46) என்பது தெரியவந்ததாம். மேலும், அறையில் இருந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது நானே எடுத்த முடிவு. எனது உடலையும், உடைமைகளையும் எனது அண்ணன், அண்ணியிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.