பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாளை.யில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பாளையங்கோட்டையில் மொத்த விற்பனைக்கு வைத்திருந்த சுமாா் 4.100 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:56 pm

DIN

பாளையங்கோட்டையில் மொத்த விற்பனைக்கு வைத்திருந்த சுமாா் 4.100 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படை போலீஸாரும், பாளையங்கோட்டை போலீஸாரும் வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச்சாலை இளங்கோ நகா் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபா்களைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சோ்ந்த வேல்பாண்டி (43), மதுரை பெத்தானியாபுரத்தை சோ்ந்த சிக்கந்தா் பாட்சா (23) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் மறைத்து வைத்திருந்த சுமாா் 4.100 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.