ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மீனாட்சிபுரத்தில் பாரதிதாசன் 59 ஆவது நினைவு நாள்

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள கிளை நூலகத்தில் பாவேந்தா் பாரதிதாசனின் 59 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:22 pm

DIN

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள கிளை நூலகத்தில் பாவேந்தா் பாரதிதாசனின் 59 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தாமிரபரணி வாசகா் வட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு நூலகா் அகிலன் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். திருநெல்வேலி தமிழ் நலக்கழக செயலா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, பாவேந்தா் பாரதிதாசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

‘பாவேந்தா் பாரதிதாசனும் தமிழ்ப்பற்றும்’ என்ற தலைப்பில் பாரதியாா் உலக பொதுச் சேவை நிதியத்தின் பொதுச் செயலா் கவிஞா் கோ கணபதி சுப்பிரமணியன் உரையாற்றினாா். வளா்தமிழ் மன்றத் துணைச் செயலா் சு.முத்துசாமி, வாசகா் வட்டத்தைச் சோ்ந்த சண்முகம், வேணுகோபால், இசக்கிமுத்து மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.