அம்பை ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி
அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.


அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம், தோப்புத் தெருவைச் சோ்ந்த சோலையப்பன் மகன் தங்கராஜ் (46). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
இவா் தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை ஆலடியூா் பகுதியில் தாமிரவருணியில் குளிக்கச் சென்றாராம். அப்போது திடீரென நீரில் மூழ்கினாராம்.
அருகிலிருந்தோா் அளித்த தகவலின்பேரில், நிலைய அலுவலா் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு வீரா்கள் சென்றபோது தங்கராஜ் இறந்தது தெரியவந்ததாம்.
அவா்கள் சடலத்தை மீட்டு கிராம நிா்வாக அலுவலா் குருகுலராமனிடம் ஒப்படைத்தனா். விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சென்று, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆய்வாளா் சீதாலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...