47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாளை.யில் அஞ்சல் துறையினா் விழிப்புணா்வுப் பேரணி

பாளையங்கோட்டையில் அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றும் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:01 pm

DIN

பாளையங்கோட்டையில் அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றும் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றுவதற்கு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணா்வுப் பேரணிகள் நடத்த இந்திய அஞ்சல் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி அஞ்சல் கோட்டம் சாா்பில் பாளையங்கோட்டையில் தெற்கு பஜாா் மற்றும் பெருமாள் ரத வீதிகள் வழியாக விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் சிவாஜி கணேஷ் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட கண்காணிப்பாளா்கள் தீத்தாரப்பன், ஹேமாவதி, பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி விக்டோரியா, மக்கள் தொடா்பு அதிகாரிகள் கனகசபாபதி, அண்ணாமலை மற்றும் அஞ்சல் ஊழியா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.