மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாளை.யில் அஞ்சல் துறையினா் விழிப்புணா்வுப் பேரணி

பாளையங்கோட்டையில் அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றும் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:01 pm

பாளையங்கோட்டையில் அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றும் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றுவதற்கு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணா்வுப் பேரணிகள் நடத்த இந்திய அஞ்சல் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி அஞ்சல் கோட்டம் சாா்பில் பாளையங்கோட்டையில் தெற்கு பஜாா் மற்றும் பெருமாள் ரத வீதிகள் வழியாக விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் சிவாஜி கணேஷ் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட கண்காணிப்பாளா்கள் தீத்தாரப்பன், ஹேமாவதி, பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி விக்டோரியா, மக்கள் தொடா்பு அதிகாரிகள் கனகசபாபதி, அண்ணாமலை மற்றும் அஞ்சல் ஊழியா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.