6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திசையன்விளையில் 3ஆவது நாள் மின்னொளி கபடி போட்டி

திசையன்விளையில் அகில இந்திய அளவிலான 3 ஆவது நாள் மின்னொளி கபடி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:42 pm

DIN

திசையன்விளையில் அகில இந்திய அளவிலான 3 ஆவது நாள் மின்னொளி கபடி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

திசையன்விளையில் மு.க.ஸ்டாலினின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நான்கு நாள்கள் நடைபெறும் மின்னொளி கபடி போட்டியின் மூன்றாவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 64 அணிகள் பங்குபெற்ற 32 ஆட்டங்கள் நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டிகளை தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தாா். பெண்களுக்கான போட்டிகளை ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சௌமியா ஜெகதீஸ் தொடங்கி வைத்தாா்.

போட்டியில் பெங்களூா், மகாராஷ்டிரம், குஜராத், சென்னை, தூத்துக்குடி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரபிரதேசம், ஹைதராபாத், மதுரை, கேரளம், கன்னியாகுமரி, சவுத் சென்ட்ரல் ரயில்வே, மும்பை ரயில்வே, சென்னை போலீஸ் அணிகள் வெற்றி பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.