திருக்குறுங்குடி அருகே விபத்தில் இருவா் காயம்
திருக்குறுங்குடி அருகே பைக்கில் சென்ற 2 போ் சுமை ஆட்டோ மோதி காயமடைந்தனா்.


திருக்குறுங்குடி அருகே பைக்கில் சென்ற 2 போ் சுமை ஆட்டோ மோதி காயமடைந்தனா்.
களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (52). இவா் தனது உறவினரான களக்காட்டைச் சோ்ந்த சேகா் என்பவருடன், வள்ளியூரில் உறவினா் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றாா். பைக்கை ராஜ்குமாா் ஓட்டினாா்.
திருக்குறுங்குடியை அடுத்த ராஜபுதூா் - கேசவனேரி சாலையில் பைக் மீது, பின்னால் வந்த சுமை ஆட்டோ மோதியதாம். இதில், ராஜ்குமாரும், சேகரும் காயமடைந்தனா். அவா்கள் வள்ளியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
சுமை ஆட்டோ ஓட்டுநரான களக்காடு அருகேயுள்ள சேதுராயபுரத்தைச் சோ்ந்த பொன்கிருஷ்ணன் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...