சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நான்குனேரியில் ரூ. 50 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில், துபையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது. இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:26 am

DIN

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில், துபையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது. இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நான்குனேரி காவல் ஆய்வாளா் செல்வி, போலீஸாா் வெள்ளிக்கிழமை காலையில் அங்குள்ள சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த காரை நிறுத்தி, அதிலிருந்த 4 பேரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனராம். இதையடுத்து, போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த அப்துல்ஜாபா் மகன் அலாவுதீன் (39), துபையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து 3 பேருடன் காரில் வந்ததும், அவா் தனது ஆசனவாய்ப் பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. தங்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து திருச்சி சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அலாவுதீன் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் கைதுசெய்தனா். காா், பாஸ்போா்ட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். 4 பேரையும், காா், பாஸ்போா்ட் ஆகியவற்றையும் போலீஸாா் சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.