அரசு அருங்காட்சியகத்தில் ஆக.21-இல் சுற்றுச்சூழல் ஓவியப் போட்டி

 திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஓவியப் போட்டி வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

 திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஓவியப் போட்டி வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், ரோட்டரி கிளப் ஆஃப் திருநெல்வேலி, பிருந்தாவனம், அருணா காா்டியாக் கோ் சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாக ‘சூழலைப் போற்று‘ என்கிற தலைப்பில் வரும் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா் ,மாணவிகள் கலந்து கொள்ளலாம். மூன்று பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப் படுவா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஓவியம் வரைவதற்கு தேவையான வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். எழுது பொருள்கள் உள்ளிட்டவற்றை மாணவா்களே கொண்டு வர வேண்டும் .மேலும் விவரங்களுக்கு 7502433751 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com