பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மேலப்பாளையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேலப்பாளையத்தில் ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1,050 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அந்த வேன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 ஜனவரி 2022, 1:05 am

DIN

மேலப்பாளையத்தில் ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 1,050 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அந்த வேன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா் மேலப்பாளையம் ஆமீன்புரம் 5-ஆவது தெருவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனில் சோதனையிட்டதில், 1,050 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், ஆம்னி வேனை ஓட்டி வந்த ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த பாண்டி (25) என்பவரை கைது செய்தனா்.

மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினா், வாகன உரிமையாளரான பட்டாணியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.