சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் பஞ்சவா்ணம் தலைமை வகித்தாா். கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஐவேந்திரன் தினேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கினாா்.
ஊராட்சி மன்ற வளாகத்தில் பொங்கலிடப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஊராட்சி துணைத் தலைவா் செல்லமணி, வாா்டு உறுப்பினா்கள் யாசா் அராபத், வசந்தா, ஊராட்சிச் செயலா் கிருஷ்ணசாமி, பொதுமக்கள் பங்கேற்றனா்.