தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லையில் மட்டுமே நடைபெறும் மாம்பழச் சங்க பண்டிகை 

நெல்லை பாளையங்கோட்டையில் சி.எஸ்.ஐ திருமண்டலம் சார்பில் மாம்பழ சங்கம் மற்றும் ஸ்தோத்திர பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். 

News image
Updated On :13 ஜூலை 2022, 10:37 am

DIN

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் சி.எஸ்.ஐ திருமண்டலம் சார்பில் மாம்பழ சங்கம் மற்றும் ஸ்தோத்திர பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். 

இந்த ஆண்டுக்கான மாம்பழ சங்கம், 242-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இரண்டாம் நாளான இன்று  பிஷப் பர்னபாஸ் தலைமையில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஆராதனை மற்றும்  திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. அதன் பிறகு பண்டிகையின் முக்கிய நோக்கமாக ஏழை மக்களுக்கு அரிசி, உணவு பொருட்கள் மற்றும் காணிக்கைகளை வழங்கினர். 

ஸ்தோத்திர பண்டிகை நாளையுடன் நிறைவடைகிறது. இந்த பண்டிகை நெல்லையில் மட்டுமே நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.