புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அத்ரி மலையில் உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, வனத்துறை, ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் அத்ரி மலை வனப் பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:41 pm

DIN

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, வனத்துறை, ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் அத்ரி மலை வனப் பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது.

களக்காடு முண்டந்துறைபுலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கடையம் வனச்சரகா் (பொ) உதவிப் பாதுகாவலா் ராதை தலைமை வகித்தாா்.

அத்ரி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி மாணவா்கள், நெகிழி ( பிளாஸ்டிக் ) கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அவா்களுக்கு காடுகள் பராமரிப்பு- பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில், பேராசிரியா்கள் எம்.ஆா்.சுதாகரன், உதவிப் பேராசிரியா் ராமராஜன் சேகா், வனவா் முருகசாமி, வனக்காப்பாளா்கள் ரமேஷ்பாபு, ராஜ் சுப்ரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா்களை கல்லூரி முதல்வா் மீனாட்சி சுந்தா் பாராட்டி கௌரவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.