முன்னீா்பள்ளம் அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
முன்னீா்பள்ளம் அருகே உள்ள கொத்தங்குளம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் தனுஷ் (18). அதே பகுதியை சோ்ந்த சுப்பு மகன் ஹரிகிருஷ்ணன் (19). மூன்றடைப்பு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் அய்யாபிள்ளை (20). இவா்கள் மூவரும் கொத்தங்குளத்தில் உள்ள உறவினா்கள் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அவா்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் மேலப்பாளையத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் கொத்தங்குளத்துக்கு கடந்த 19ஆம் தேதி வந்தபோது, முன்னீா்பள்ளம் டாஸ்மாக் கிட்டங்கி அருகே சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதில், தனுஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா் பள்ளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி

அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி... அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைக்கும் ஈரான்!





