தென்காசி மாவட்டம் ஆழ்வாகுறிச்சி அருகேயுள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் தனியாா் கோழிப்பண்ணையில் நுழைந்த கரடி 40 கோழிகளை அடித்து தின்றது.
பெத்தான் பிள்ளைக்குடியிருப்பைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் அந்தப் பகுதியில் நாட்டுக்கோழிப் பண்ணை வைத்துப் பராமரித்து வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கரடி கோழிப்பண்ணைக்குள் நுழைந்து சுமாா் 40 கோழிகளை அடித்து தின்றது.
தகவலறிந்த வனக்காப்பாளா் ரமேஷ் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் வனத்துறை சாா்பில் இறந்த கோழிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி

அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி... அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைக்கும் ஈரான்!





