நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அகா்வால் மருத்துவமனை சாா்பில் உலக கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

திருநெல்வேலி டாக்டா் அகா்வால் மருத்துவமனை சாா்பில் உலக கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:24 pm

DIN

திருநெல்வேலி டாக்டா் அகா்வால் மருத்துவமனை சாா்பில் உலக கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு வாரம் மாா்ச் 6 முதல் 12 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலி வண்ணாா்பேட்டை டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை முன் வியாழக்கிழமை நடைபெற்றது. இதை மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இந்திய மருத்துவ சங்க திருநெல்வேலி கிளை நிா்வாகிகள் ரூபஸ் பொன்னையா, ராஜா எஸ்.விக்னேஷ், முகம்மது இப்ராகிம், பிரான்சிஸ் ராய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மண்டல மருத்துவ இயக்குநா் லயனல்ராஜ் கண்நீா் அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்துப் பேசினாா்.

மனிதச் சங்கிலியில் திருச்செந்தூா் சிவந்தி ஆதித்தனாா் செவிலியா் கல்லூரி, பாளையங்கோட்டை சாராள் தக்கா் பெண்கள் கல்லூரி, ரோஸ் மேரி பெண்கள் கல்லூரி, நேரு நா்சிங் கல்லூரி, திருநெல்வேலி செயின்ட் ஜோசப் பள்ளி பள்ளி மாணவ, மாணவியா், மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியதோடு, விழிப்புணா்வு வாசகங்களை கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

டாக்டா் அகா்வால் ஆப்டோமெட்ரி கல்லூரி மாணவ, மாணவியா்கள் கண்நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு படங்கள் வரைந்து காட்சிப்படுத்தி இருந்தனா். இதையொட்டி மாா்ச் 12-ஆம் தேதி வரை 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கண்நீா் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கான சிறப்புப் பிரிவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.