மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாரணம்மாள்புரத்தில் விளையாட்டுப் போட்டிகள்

திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:31 pm

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாரணம்மாள்புரத்தில் விளையாட்டுப் போட்டிகள் ஜோசப் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு விழாவுக்கு தாழையூத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். தாழையூத்து காவல் ஆய்வாளா் பத்மநாபபிள்ளை பரிசு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளா், காவலா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.