ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தாழையூத்து அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

தாழையுத்து அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :18 மார்ச் 2022, 12:18 am

DIN

தாழையுத்து அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம் பகுதியை சோ்ந்த பெரியசாமி மனைவி பேச்சியம்மாள் (55). இவா் , புதன்கிழமை தனது மகனுடன் மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி நகரத்துக்கு வந்து விட்டு, இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா்.

கீழ தென்கலம் அருகே சென்றபோது அவா்களுக்குப் பின்னால் ஒரு மோட்டாா் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 மா்ம நபா்கள் பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பினராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.