செல்போனை திருடி கொரியரில் அனுப்பிய திருடன்!! நடுவில் நடந்த டிவிஸ்ட்
செல்போனை திருடி கொரியரில் அனுப்பிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் புகார்.

செல்போன் திருட்டு
சித்தரிக்கப்பட்டது

செல்போன் திருட்டு
சித்தரிக்கப்பட்டது
சென்னை: சென்னையில், செல்போனை திருடிவிட்டு, அதன் மூலம் பண மோசடிகளை செய்த திருடன், கொரியரில் செல்போனை திருப்பி அனுப்பிய விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வேல்முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போனை, அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றிருக்கிறார்.
வேல்முருகனும், தொடர்ந்து தன்னுடைய செல்போனுக்கு அழைத்தும், யாரும் செல்போனை எடுக்கவில்லை. ஒருமுறை, அவரது மனைவி, அந்த செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது, மறுமுறையில், போனை எடுத்த இளைஞர், இந்த போனை திருப்பிக் கொடுக்க வீட்டு முகவரியை அனுப்புமாறு கேட்டிருக்கிறார். அவரும் உடனடியாக வீட்டு முகவரியைக் கொடுத்ததும், திருடனோ, செல்போனைத் திருப்பிக் கொடுக்க ரூ.1,500 பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அவரும் பணம் அனுப்பியிருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட திருடன், செல்போனை கொரியர் மூலம் அனுப்பியிருக்கிறார்.
வேல்முருகன் கொரியரில் வந்த செல்போனை ஆன் செய்து பார்த்தபோது, அது முழுக்க முழுக்க ஃபார்மட் செய்யப்பட்டு, ஒரு புது செயலி பதிவேற்றம் செய்து அதன் மூலம், செல்போனில் இருந்த போன் பேவிலிருந்து ரூ.5,000 எடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வதுள்ளது.
அது மட்டுமல்லாமல், வேல்முருகனின் செல்போனில் பதிவான தொடர்பு எண்களுக்கு மெசேஜ் மூலம் பணம் கேட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...