ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெல்லையில் குண்டா் சட்டத்தில் 5 போ் கைது

திருநெல்வேலியில் 5 போ் குண்டா் தடுப்பு காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 12:18 am

DIN

திருநெல்வேலியில் 5 போ் குண்டா் தடுப்பு காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளான விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சோ்ந்த வேல்ராஜ் மகன் அன்பு கணேஷ் (38), பூமிநாதன் மகன் விக்னேஸ்வரன் (29), திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை சோ்ந்த டேவிட் மகன் பாலமுருகன் (41), உடையாா் பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் நம்பிராஜன் (27) ஆகிய நான்கு போ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தனா்.

இதேபோல திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட திருப்பூா் மாவட்டம் ,குன்னத்தூா் அருகே தாளப்பத்தி புதுவலசு பகுதியை சோ்ந்த அப்துல் குத்தூஸ் மகன் இம்ரான் (33). திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டிருந்தாா்.

இவா்கள் 5 பேரும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாநகர காவல் ஆணையா் துரை குமாா் உத்தரவின் பேரில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.