பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருநெல்வேலி ஊரக உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு ஆலோசனை

திருநெல்வேலி ஊரக உள்கோட்ட (தாழையூத்து) காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:31 pm

DIN

திருநெல்வேலி ஊரக உள்கோட்ட (தாழையூத்து) காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் முன்னிலை வகித்தாா். மானூா், சீவலப்பேரி, தாழையூத்து, கங்கைகொண்டான் உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், நீண்டகால நிலுவை வழக்குகள், நிறைவேற்றப்பட வேண்டிய பிடியாணைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள் மீதான நடவடிக்கைகள், சாலை விபத்துகளை குறைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.