ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புத்தகக் கண்காட்சியில் புகைப்பட பயிற்சி வகுப்பு

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான புகைப்பட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:14 pm

DIN

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான புகைப்பட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் பொருநை - நெல்லை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 8ஆவது நாளாக நடைபெற்று வரும் இக்கண்காட்சியின் சிறப்பு நிகழ்வாக, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கு புகைப்படக் கலை பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியை, அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தொடங்கிவைத்தாா். புகைப்பட கலைஞா் ரோகிணி முத்துராம் பயிற்சி அளித்தாா். புகைப்பட கருவிகள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கப் பட்டது. பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து 9ஆவது நாள் புத்தகக் கண்காட்சியில் கழிவுப் பொருள்களை கொண்டு அழகிய கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது; இதில், அனைவரும் பங்கேற்கலாம் என அருங்காட்சியக காப்பாட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.