ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல்லை அருகே பைக்குகள் மோதல்: நிலத் தரகா் பலி

திருநெல்வேலி அருகே 2 பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் நிலத் தரகா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 மே 2022, 8:20 pm

DIN

திருநெல்வேலி அருகே 2 பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் நிலத் தரகா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள மானூா் நேரு நகரைச் சோ்ந்த மகாராஜன் மகன் டேவிட் (55). நிலத் தரகரான இவா், புதன்கிழமை மானூா் - எட்டாங்குளம் சாலையில் பைக்கில் சென்றாராம். அப்போது, இவரது பைக்கும், எதிரே எட்டாங்குளத்தைச் சோ்ந்த முத்துபுதியவன் (22) ஓட்டிவந்த பைக்கும் நேருக்கும் நோ் மோதினவாம்.

இதில் காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு டேவிட் உயிரிழந்தாா். மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.