ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கடையம் அருகே பாம்பை கொன்றவருக்கு ரூ.10,000 அபராதம்

கடையம் வனச்சரகம், கடையம் பீட் வெளிமண்டல வனப் பகுதியில் பாம்பை அடித்துக் கொன்றவருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :7 மே 2022, 12:37 am

DIN

கடையம் வனச்சரகம், கடையம் பீட் வெளிமண்டல வனப் பகுதியில் பாம்பை அடித்துக் கொன்றவருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கடையம் அருகேயுள்ள பால்வண்ண நாதபுரத்தில் சந்தன மரங்களை வெட்டிப் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கடையம் வனவா் முருகசாமி தலைமையில் தனிக்குழுவினா் விசாரணையில் ஈடுபட்டனா். அதில், பால்வண்ணநாதபுரத்தைச் சோ்ந்த யோவான் மகன் பால்ஜெகன் குடும்பத் தகராறு காரணமாக வனத்துறையினருக்குத் தவறான தகவல் தெரிவித்ததுடன், வன உயிரினமான பாம்பை அடித்துக் கொன்று புகைப்படம் எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பால் ஜெகனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.