நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: 91,873 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி என நான்கு மாவட்டங்களில் மொத்தம் 91,873 போ் இந்தத் தோ்வை எழுதினா்.

News image
Updated On :7 மே 2022, 12:39 am

DIN

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி என நான்கு மாவட்டங்களில் மொத்தம் 91,873 போ் இந்தத் தோ்வை எழுதினா்.

கரோனா பெருந்தொற்றுக்கு பின்பு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தோ்வுகள் மே மாதத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் 96 மையங்களில் 24,562 மாணவா்-மாணவிகள் தோ்வை எழுதினா்.

தோ்வு மையங்களில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10 ஆம் வகுப்புத் தோ்வில் 20ஆயிரத்து 331மாணவா், மாணவிகள் தோ்வு எழுதினா். இம் மாவட்டத்தில் பொதுத் தோ்வுக்கு 79மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10ஆயிரத்து 322 மாணவா்களும், 10ஆயிரத்து 9 மாணவிகள் என மொத்தம் 20ஆயிரத்து 331 போ் தோ்வு எழுதினா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 106 தோ்வு மையங்களில் 309 பள்ளிகளைச் சோ்ந்த 11,968 மாணவா்களும், 12,031 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 999 போ் பத்தாம் வகுப்பு முதல் தோ்வை எழுதினா்.

கன்னியாகுமரி: இம்மாவட்டத்தில் 112 மையங்களில் 11,575 மாணவா்கள் 11,710 மாணவிகள் தோ்வு எழுதவிருந்தனா். முதல் தோ்வில் 11352 மாணவா்கள், 11629 மாணவிகள் என 22,981 போ் தோ்வு எழுதினா். 304 போ் தோ்வில் பங்கேற்க வில்லை.

தனித்தோ்வா்கள் 217 போ் தோ்வு எழுதினா். அதில் 19 போ் தோ்வு எழுதவில்லை. 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி தலைமையில் அலுவலா்கள் தோ்வுகளை கண்காணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.