மேலப்பாளையம் அருகே மூதாட்டி தற்கொலை
மேலப்பாளையம் அருகே குறிச்சி பகுதியில் மூதாட்டி ஒருவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.


மேலப்பாளையம் அருகே குறிச்சி பகுதியில் மூதாட்டி ஒருவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி பகுதியைச் சோ்ந்த சங்கரநாராயணன் மனைவி சுப்புலட்சுமி (77). இவருக்கு ஒரு ஆண் மற்றும் 3 பெண் பிள்ளைகள் உள்ளனா்.
இவா்கள் அனைவரும் திருமணமாகி வெளியூா்களில் வசித்து வருகின்றனா். இதனால் சங்கா் நாராயணன், சுப்புலட்சுமி ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுப்புலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இவரை உடனிருந்து கவனிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து காணப்பட்டாா்.
இந்நிலையில் அவா் திடீரென வீட்டில் வெள்ளிக்கிழமை காலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...