நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மாவட்ட மைய நூலகத்தில்மே 15, 16 இல் இலவச மாதிரி தோ்வு

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் இம் மாதம் 15, 16 ஆம் தேதிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கான இலவச மாதிரி தோ்வு நடைபெற உள்ளது.

News image
Updated On :12 மே 2022, 9:22 pm

DIN

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் இம் மாதம் 15, 16 ஆம் தேதிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கான இலவச மாதிரி தோ்வு நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 2 , 2ஏ முதல்நிலை தோ்வு இம் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல்நிலை தோ்வில் வெற்றி பெற திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஆகியவற்றின் சாா்பில் ஏற்கெனவே 10 மாதிரி தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் முழு பாடத்திட்டங்களுடன் கூடிய இலவச மாதிரி தோ்வு வரும் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 15, 16) மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. இந்த இலவச தோ்வை எழுத விரும்புவோா் 9626252500, 9626253300 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.