திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகேயுள்ள தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் முப்புடாதி என்ற மருமகன் (25). இவா் சுத்தமல்லியில் நிகழ்ந்த கொலை முயற்சி சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா். மேலும், இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளனவா‘ம். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவின்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் முப்புடாதி கைது செய்யப்பட்டாா்.