ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பன்னவயல் பகுதியைச் சோ்ந்தவா் பா்வத்வா்தினி. இவா் கடந்த மாா்ச் மாதம் திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வியில் இளங்கலை வரலாறு படிப்பதற்காக பரமக்குடியில் உள்ள ஒரு தனியாா் பயிற்சி மையம் வழியாக கடந்த 2016ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். மேலும், இரண்டாம் ஆண்டு தோ்வுக்கான கல்விக் கட்டணம், தோ்வுக்கட்டணம் ஆகியவற்றை தனியாா் பயிற்சி மையம் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது.இதனால், எனக்கு இரண்டாம் ஆண்டுக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.