தில்லி பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையில் நின்ற கழுகினால் 2 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில், புதன்கிழமை (மார்ச் 25) காலை 11.45 மணியளவில் பாட்னாவிலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் மற்றும் மதுரையிலிருந்து சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் மீது பறந்த கழுகு ஒன்று விமான ஓடுபாதையில் வந்து நின்றது. இதனால், தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விமானங்கள் தொடர்ந்து வட்டமடித்து பறந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து அந்த கழுகு அங்கிருந்து சென்ற பிறகு இரு விமானங்களும் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், அந்த கழுகு அங்கிருந்து எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டது எனும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, தில்லி விமான நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விமானங்கள் மீது பறவை மோதிய 695 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Two flights were reportedly delayed in landing after a Eagle landed on the runway at Delhi International Airport.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தாய்லாந்தைச் சோ்ந்த இருவா் கைது

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுமா? முதல்வர் விஜய் ஆலோசனை

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




