செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் ஆகாசா ஏா் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு போயிங் 737 விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் சேதமடைந்தன

News image

(கோப்புப் படம்)

Updated On :17 ஏப்ரல் 2026, 2:27 am IST

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் ஆகாசா ஏா் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு போயிங் 737 விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் சேதமடைந்தன. இது தொடா்பாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆகாசா ஏா் நிறுவனம் கூறுகையில், ‘விமான நிலையத்தின் முனையம் 1-இல் பிற்பகல் 2:15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, ஆகாசா ஏா் நிறுவனத்தின் க்யூபி 1406 விமானம் தில்லியிலிருந்து ஹைதராபாத் புறப்பட நின்றுகொண்டிருந்தது. லடாக்கின் லே பகுதியில் இருந்து தில்லி வந்து தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி 124 விமானம், விமானம் நிறுத்தும் இடத்திற்குச் சென்றபோது ஆகாசா விமானம் மீது மோதியது. இதையடுத்து, பயணிகள் மற்றும் குழுவினா் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்’ எனத் தெரிவித்தது.

இது தொடா்பாக டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், ‘விமானம் நிறுத்தும் இடத்துக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வலது இறக்கையின் முனை ஆகாசா ஏா் விமானத்தின் பின்புற கிடைமட்ட வால் பகுதியில் மோதியது. இதன் காரணமாக இரு விமானங்களிலும் சேதம் ஏற்பட்டது. இதில் பயணிகள் மற்றும் குழுவினா் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.