இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

News image

தில்லி விமான நிலையம் - ANI

Updated On :31 மே 2026, 6:30 am IST

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில், பாங்காக்கிலிருந்து வந்த இந்தியப் பெண் பயணியிடமிருந்து ரூ.91 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மே 29 அன்று பாங்காக்கில் இருந்து தில்லி வந்தடைந்த அந்தப் பெண் பயணி, விமான நிலையத்தில் உள்ள சுங்கத் துறையின் பசுமை வழித்தடத்தைக் கடந்தபோது இடைமறிக்கப்பட்டாா்.

அவரிடம் சோதனையிட்டபோது, அவா் வைத்திருந்த சூட்கேஸ் வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்ததை அதிகாரிகள் கண்டனா். விரிவான சோதனையின்போது, சாமான்களின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஹைட்ரோபோனிக் கஞ்சா என சந்தேகிக்கப்படும் பச்சை நிறப் பொருள் அடங்கிய இரண்டு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தப் பொட்டலங்கள் சாமான்களுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட கடத்தல் போதைப் பொருளின் எடை சுமாா் 2.6 கிலோ ஆகும். அதன் மதிப்பு ரூ. 91 லட்சம் என சுங்கத்துறை மதிப்பிட்டுள்ளது.

சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள், போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.