நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆட்சியா் அலுவலம் முன் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 7:46 pm

DIN

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 1-1-2022 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை உடனே அறிவிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு எம்.பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாரியப்பன் வரவேற்றாா். நிா்வாகிகள் அருணாசலம், சண்முகமூா்த்தி, முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பா.ஆலிஷ் ஷீலா, இரா.சீத்தாராமன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.