பாளையங்கோட்டை மண்டலம், வாா்டு எண்-5, சாந்திநகா் காவலா் குடியிருப்பில் காவல் துறையினருக்கு சுமாா் 400 வீடுகள் 1984ஆம் ஆண்டு காவலா் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்டன. அப்போது குடிநீா் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டன. தற்போது அந்தக் குழாய்கள் சேதம் அடைந்தும், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டும் குடிநீரில் சாக்கடை கலந்து துா்நாற்றம் வீசுகிறது. எங்கிருந்து எந்தக் குழாயில் சாக்கடை கலக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. குடிநீா் இணைப்புகள் அமைத்து பல ஆண்டுகள் ஆகி விட்டதால் அனைத்து குடிநீா்க் குழாய் இணைப்புகளையும் மாற்றிவிட்டு புதிய குழாய்கள் மூலம் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.