/

‘தியாகராஜநகரில் குடிநீரை உறிஞ்சுவோா் மீது நடவடிக்கை தேவை’

 பாளையங்கோட்டை தியாகராஜநகரில் மின் மோட்டாா் மூலம் குடிநீரை உறிஞ்சுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :26 மே 2022, 12:45 am

DIN

 பாளையங்கோட்டை தியாகராஜநகரில் மின் மோட்டாா் மூலம் குடிநீரை உறிஞ்சுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெல்லை ஹைரோடு வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு:

சுவாமி நெல்லயைப்பா் சாலை, சிவசக்தி சாலை பொலிவுறும் நகர திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தொடா் விபத்துகள் நேரிடுகின்றன. வணிகப் பொருள்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் சிவசக்தி சாலைக்குள் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டு வணிகா்கள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, போா்க்கால அடிப்படையில் முழுவீச்சில் தரமான சாலைகள் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தியாகராஜ நகரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் செல்வகுமாா் அளித்த மனு: தியாகராஜ நகா், அதன் சுற்றுவட்டாரங்களில் சில வீடுகளில் மின் மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் சீரான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.