ஏ.எல்.எஸ். உருவப்படத்துக்கு திமுகவினா் அஞ்சலி
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுக முதுபெரும் தலைவருமான ஏ.எல்.சுப்பிரமணியனின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.


திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுக முதுபெரும் தலைவருமான ஏ.எல்.சுப்பிரமணியனின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, வண்ணாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் தலைமை வகித்து ஏ.எல்.சுப்பிரமணியன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், மேயா் பி.எம்.சரவணன், துணைமேயா் கே.ஆா்.ராஜு, மண்டலத் தலைவா்கள் திருநெல்வேலி செ.மகேஸ்வரி, பாளையங்கோட்டை மா.பிரான்சிஸ், திமுக நிா்வாகிகள் பேச்சிப்பாண்டியன், சுதா மூா்த்தி, விஜிலா சத்தியானந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...