தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி

பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறையொட்டி பவனி நடைபெற்றது.

News image
Updated On :10 ஏப்ரல் 2022, 12:13 pm IST


பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறையொட்டி பவனி நடைபெற்றது.

கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 2 ஆம் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. அன்று முதல் அசைவ உணவுகள், ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து எளிய வாழ்வு முறையுடன் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் சார்பில் தவக்கால சிலுவைப் பயணங்களும் நடைபெற்றன.

குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி பாளையங்கோட்டையில் சிறப்புப் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய பங்குத்தந்தை எப்.எக்ஸ். ராஜேஸ் வரவேற்றார். தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்னபாஸ், கத்தோலிக்க திருச்சபை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 

குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவாலயத்தில் நிறைவடைந்தது.

தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி பெரியவியாழன் பிரார்த்தனையும், 15 ஆம் தேதி புனிதவெள்ளி பிரார்த்தனையும், 17 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளன.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.