இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:56 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி வியாழக்கிழமை காலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். நான்காம் திருநாளான இம் மாதம் 29 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமி-அம்மன் வீதியுலாவும் நடைபெறும்.

பிப்ரவரி 4 ஆம் தேதி தைப்பூசத் தீா்த்தவாரித் திருவிழா வரலாற்று புகழ் வாய்ந்த கைலாசபுரம் தீா்த்தவாரி மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதற்காக சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்மன், அகஸ்தியா், தாமிரவருணி, குங்கிலிய நாயனாா், சண்டிகேஸ்வரா், அஸ்திரதேவா், அஸ்திர தேவி ஆகிய மூா்த்திகள் 4 ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பா் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.நெடுஞ்சாலை, திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலம் வழியாக கைலாசபுரத்தை அடைவா். தாமிரவருணியில் தீா்த்தவாரி முடிந்து விஷேச தீபாராதனைக்கு பின்பு மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.நெடுஞ்சாலை வழியாக பாரதியாா்தெரு, தெற்குப் புதுத்தெரு, ரத வீதி சுற்றி திருக்கோயிலுக்கு வந்து சோ்வா்.

பிப்ரவரி 5 ஆம் தேதி சௌந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டா்களுக்கு திருநடனம் காட்டியருளும் சௌந்தர சபா நடராஜா் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. 6 ஆம் தேதி சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளி தெப்பக்குளத்தில் பஞ்ச மூா்த்திகளுடன் வலம் வரும் தெப்பத்திருவிழா இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.அய்யா்சிவமணி, ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.