தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கல்லிடை அருகே மின் மோட்டாா் திருடியவா் கைது

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சியில் மின்மோட்டாா் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2023, 8:04 pm

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சியில் மின்மோட்டாா் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

மூலச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (63). இவருக்கு தெற்கு கரம்பை, கழுவன்திரட்டு பகுதியில் சொந்தமாக வயல் உள்ளது. வயலில் தண்ணீா் பாய்ச்சப் பயன்படுத்திய நீா்மூழ்கி மோட்டாா் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருடுபோனதாம். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவந்தாா்.

விசாரணையில், மூலச்சி, வடக்கு தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (27) நீா்மூழ்கி மோட்டாரைத் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்து நீா்மூழ்கி மோட்டாரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.