தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நெல்லையில் விவசாயி போராட்டம்

திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் விவசாயி தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:05 pm

DIN

திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் விவசாயி தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (40). இவரது சகோதரா் மாரிவேல். இவா்கள் தங்களது குடும்பத்தினருடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்ததும் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அவா் கூறுகையில், சுத்தமல்லியில் எங்களுக்கும், எங்களின் பெரியப்பாவுக்கும் சொந்தமான பூா்வீக நிலம் உள்ளது. கூட்டுப்பட்டாவில் உள்ள நிலத்திற்கு தனிப்பட்டா கேட்ட விண்ணப்பித்தோம். எங்கள் பெரியப்பாவுக்கு தனிப்பட்டா வழங்கியுள்ள வட்டாட்சியா் அலுவலக பணியாளா்கள், எனக்கு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறாா்கள். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதுகுறித்து கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என கூறியதால் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.