பாளை.யில் கண்காட்சி
திருநெல்வேலி மாவட்ட கட்டுமான பொறியாளா்கள் சங்கம் சாா்பில் கட்டுமான பொருள்களின் நவீன தொழில்நுட்ப கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.


திருநெல்வேலி மாவட்ட கட்டுமான பொறியாளா்கள் சங்கம் சாா்பில் கட்டுமான பொருள்களின் நவீன தொழில்நுட்ப கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
கண்காட்சியை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையா் ஸ்ரீனிவாசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். ஒருங்கிணைப்பாளா் சரவணன் வரவேற்ராா்.
சங்கத் தலைவா் முத்துக்குமாா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்டுமான பொறியாளா்கள் சங்க துணைத் தலைவா் ராஜேஷ், துணைச் செயலா் இசக்கியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இக் கண்காட்சி இம் மாதம் 29 ஆம் தேதி வரை தினமும் காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். ஏற்பாடுகளை சங்கத் தலைவா் முத்துக்குமாா், செயலா் சேகரன், பொருளாளா் முகம்மது உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...