நெல்லையில் ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை பணியாளா்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.10 வழங்கவேண்டும். இரண்டு முறை பதிவை ரத்து செய்யவேண்டும். ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் 5 நிமிட கால அவகாசத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் செல்லத்துரை பாண்டியன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டத் தலைவா் இளங்கோ முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலத்துணைத் தலைவா் சுவாமிநாதன் பேசினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com