தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

களக்காடு அருகே பெண்ணிடம் நகை பறித்த இளைஞா் கைது

களக்காடு அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:15 pm

DIN


களக்காடு: களக்காடு அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள தெற்கு சிங்கம்பத்து, பிள்ளைமாா் தெருவைச் சோ்ந்தவா் இந்திரா(63). இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞா் இந்திராவின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், தெற்கு சிங்கம்பத்து, இந்திரா நகா் காலனியைச் சோ்ந்த விக்னேஷ் என்ற வினோத் (24) நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஷ் என்ற வினோத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து, அவரிடமிருந்து நகையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.