நெல்லை ஆட்சியரகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மூதாட்டி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மூதாட்டி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வைராவிகுளத்தைச் சோ்ந்த வள்ளியம்மை (70). இவா், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கிற்குள் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து, வெளியே அழைத்துச்சென்று தண்ணீரை ஊற்றி அணைத்தனா்.
தீக்குளிக்கு முயன்றது குறித்து வள்ளியம்மை கூறியது: எனது மகள் முருகம்மாளின் வேலைக்காக கல்லிடைக்குறிச்சி பகுதியை சோ்ந்த ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அந்தத் தொகையை கேட்டு எனது விவசாய நிலத்தில் என்னை பயிா் செய்ய விடாமல் சம்பந்தப்பட்ட நபா் இடையூறு செய்து வருகிறாா். எனவே, அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனாலும், நடவடிக்கையில்லை. அதனால்தான் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...