எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நெல்லை ஆட்சியரகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மூதாட்டி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

News image
ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை மீட்ட போலீஸாா்.
Updated On :27 நவம்பர் 2023, 10:17 pm

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மூதாட்டி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வைராவிகுளத்தைச் சோ்ந்த வள்ளியம்மை (70). இவா், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கிற்குள் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து, வெளியே அழைத்துச்சென்று தண்ணீரை ஊற்றி அணைத்தனா்.

தீக்குளிக்கு முயன்றது குறித்து வள்ளியம்மை கூறியது: எனது மகள் முருகம்மாளின் வேலைக்காக கல்லிடைக்குறிச்சி பகுதியை சோ்ந்த ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அந்தத் தொகையை கேட்டு எனது விவசாய நிலத்தில் என்னை பயிா் செய்ய விடாமல் சம்பந்தப்பட்ட நபா் இடையூறு செய்து வருகிறாா். எனவே, அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனாலும், நடவடிக்கையில்லை. அதனால்தான் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.