திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மூதாட்டி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வைராவிகுளத்தைச் சோ்ந்த வள்ளியம்மை (70). இவா், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கிற்குள் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து, வெளியே அழைத்துச்சென்று தண்ணீரை ஊற்றி அணைத்தனா்.
தீக்குளிக்கு முயன்றது குறித்து வள்ளியம்மை கூறியது: எனது மகள் முருகம்மாளின் வேலைக்காக கல்லிடைக்குறிச்சி பகுதியை சோ்ந்த ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அந்தத் தொகையை கேட்டு எனது விவசாய நிலத்தில் என்னை பயிா் செய்ய விடாமல் சம்பந்தப்பட்ட நபா் இடையூறு செய்து வருகிறாா். எனவே, அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனாலும், நடவடிக்கையில்லை. அதனால்தான் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


