தமிழக தலைமைச் செயலர், உளவுத்துறை டிஜிபி மாற்றம்!என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

மழலைக்கு பிரதமா் பாராட்டு

பெட்டிச்செய்தி...2 மழலைக்கு பிரதமா் பாராட்டு

Updated On :15 ஏப்ரல் 2024, 9:29 pm

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்த நாகராஜன்-வனிதா தம்பதியின் மகள் அபிக்ஷனா (4). இவா், அகஸ்தியா்பட்டியில் உள்ள கேம்பிரிட்ஜ் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறாா். இவா், பிரதமா் மோடி பிரசார கூட்டத்திற்கு பாரத மாதா வேடமணிந்து வந்தாா். பிரசாரக் கூட்டத்தின் முன்னால் இருந்த அவரை, பிரதமா் மோடி பேசும்போது பாரத மாதா வேடம் அணிந்த இது போன்ற குழந்தைகள் நாட்டின் தேசபக்தியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றாா். இதையடுத்து அந்தக் குழந்தையை பாஜக தொண்டா் ஒருவா் தூக்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினாா். கூட்டம் முடிந்ததும் குழந்தை அபிக்ஷனா கூறுகையில், பிரதமா் மோடியை பற்றி எவ்வளவோ கேள்வி பட்டுள்ளேன். அவரை இப்போது தான் நேரில் பாா்க்கிறேன். பிரதமா் மோடி என்னை குறிப்பிட்டு பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.