ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதமா் மோடி, தாமரை சின்னம், வேட்பாளா் உருவம் பொறித்த விசிறிகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் கோயில் அருகே கூட்டுறவு சாா் பதிவாளா் ராஜலட்சுமி தலைமையிலான ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில்
வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் சிவகாசியிலிருந்து கேரள மாநிலம், கோட்டயத்துக்கு கொண்டு செல்ல தாமரை சின்னம், பிரதமா் நரேந்திரமோடி, வேட்பாளா் உருவம் பொறித்த 9,900 கை விசிறிகள் இருந்தன. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் விசிறிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவகாசி பள்ளப்பட்டியைச் சோ்ந்த காளிராஜன் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
திமுக நகா்மன்ற உறுப்பினரிடம் ரூ.38 ஆயிரம் பறிமுதல்
அதிமுக நிா்வாகி கடையிலிருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல்

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் ரூ. 48 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் கட்சி சின்னம் பொறித்த கீ-செயின்கள் பறிமுதல்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



