தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:29 pm

தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா மலைக் கெபி திருவிழாவையொட்டி புனித கொடியை அா்ச்சித்த குருவானவா்கள்.

வள்ளியூா், ஏப். 26: திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த பனிமாதா காட்சி கொடுத்த மலைக் கெபி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் திருத்தலங்களில் சிறப்பு பெற்றது தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலமாகும்.

பரிசுத்த அதிசய பனிமாதா தெற்குகள்ளிகுளம் மலையில் காட்சி கொடுத்த இடத்தில் கெபி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு கெபி திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பரிசுத்த அதிசய பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை கோயில் தா்மகா்த்தா மருத்துவா் மி.ஜெபஸ்டின் ஆனந்த் எடுத்து வந்தாா். அந்தப் புனித கொடியை குருவானவா்கள் பீற்றா் பாஸ்டியான், ஸ்டாலின், உதவி பங்குத்தந்தை ஜாண் ரோஸ் ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சித்தனா். பின்னா் தா்மகா்த்தா கொடியேற்றினாா்.

அதைத் தொடா்ந்து சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

திருவிழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மன்றாட்டு மாலை தொடா்ந்து திருப்பலி நடைபெறுகிறது.

மே 4ஆம் தேதி 9ஆம் திருவிழாவை முன்னிட்டு மாலை 5.30 மணிக்கு மலையடிவாரத்தில் இருந்து மலை கெபிக்கு ஜெபமாலை மற்றும் மன்றாட்டு மாலை பவனி நடைபெறுகிறது. பின்னா் ஜெபநாதன் அடிகளாா் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் தொடா்ந்து இரவு 10 மணிக்கு அன்னையின் சப்பர பவனியும் நடைபெறுகிறது.

மே 5ஆம் தேதி 10ஆம் திருவிழாவை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கெபியில் அருள்தந்தை ஜெரால்டு எஸ். ரவி தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.

மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீா், அன்னையின் ஒளியேற்றல், கொடியிறக்கம் நடைபெறுகிறது. அதன் பின்னா் அசனவிருந்து நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா மருத்துவா் மி.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் குருவானவா்கள் ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குத் தந்தை ஜாண் ரோஸ், அருள்சகோதரிகள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செய்துள்ளனா்.